நடிகர் சூர்யா மலையாள இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா:
தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா படைப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மற்றும் சூரரைப்போற்று படத்தை உருவாக்கிய சுதா கொங்கரா ஆகியோர் படங்களை கை வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஜல்லிக்கட்டு என்ற படத்தை இயக்கி விருதையும் பெற்றுள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிடம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஒரு கதையை சொன்னதாகவும், அந்த கதையை கேட்டதும் சூர்யாவுக்கு ரொம்ப பிடித்து போனதாகவும் அதனால் அவர் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.