நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி கொடுத்த செய்தி வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் செயல்:
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இதனை அடுத்து, இவர் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில், சரண்யா பொன்வண்ணன்,சத்யராஜ், தேவதர்ஷினி,இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்த, பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு அதாவது (2022ல்) பிப்ரவரி 4ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின், முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் உள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் ஆதித்யா வர்மா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் பாடல் எழுதி தந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்