முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா குறித்த விஷயத்தை முக்கிய பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா
நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சூர்யா. ஆரம்பத்தில் ஒரு சுமாரான நடிகராக இருந்தாலும் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்தார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதற்கு விதிவிலக்கும் சூர்யா தான்.
இவரை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். பிரபல நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை சிறந்த ஜோடி என்று அனைவரின் எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து வருகின்றனர். ஜோதிகாவும் தனக்கு சூர்யா மாதிரி கணவர் கிடைத்தது மிகவும் பெருமையாக இருப்பது போன்றும் கூறியிருந்தார்.
சில காலமாக சூர்யாவின் படங்கள் பிளாப் ஆகி வந்த நிலையில் சூரரை பெற்று டாப் ஹிட் அடித்தது. இந்நிலையில் முக்கிய பிரபலமாக திகழும் ராஜன் என்பவரிடம் ஓடிடியில் படங்கள் வெளியாவதை பற்றி கேட்டபோது அவர் சூர்யாவையே குற்றம் சாட்டி உள்ளார். அதாவது ஓடிடியில் படத்தை முதன்முதலில் வெளியிட்டது சூர்யா தான். அப்பொழுது இருந்த சூழ்நிலை அப்படி என்பதால் அதில் தவறு எதுவும் இல்லை.
ஆனால் இப்பொழுது திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்த 30வது நாளோ அல்லது 15வது நாளோ தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை சூர்யா கவனத்தில் எடுத்துக்கொண்டார் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்