இயக்குனர் கெளதம் மேனன் படைப்பில் நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் கெளதம் மேனன்:
தமிழ் திரையுலகில் காதலையும், ஆக்சனையும் வித்தியாசமான கோணத்தில் காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் கெளதம் மேனன். சமீபத்தில் இவர் எடுத்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் புகுந்து விளையாடி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் இப்பொழுது 13 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அவரின் சினிமா கேரியரில் இவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் அது காக்க காக்க தான்.
எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க., டைட்டில் ஜெயிக்கிற ஆசை இல்லையா? மைனாவை வறுத்தெடுத்த விஜே பார்வதி!!
இப்படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா லீடு ரோலில் நடித்திருப்பார்கள். இந்நிலையில் இப்படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் கெளதம் மேனன் படைப்பில் நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.