ஜெய்பீம் படத்தின் காரணமாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஆதரவு குரல்:
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். வெளியான நாள் முதல் இன்று வரை பல ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், இயக்குனர்களும் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர்.
அதே சமயத்தில், இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தியதாக பாமக சார்பில் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டது. இந்த பிரச்சனை தற்போது பூதகரமாகியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜ் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெய்பீம் படப் பிரச்சனையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்