ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவுக்கு கிடைத்த கெளரவம் – சர்வதேச அளவில் முக்கிய அங்கீகாரம்!!

0
ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவுக்கு கிடைத்த கெளரவம் - சர்வதேச அளவில் முக்கிய அங்கீகாரம்!!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், உருவான ஜெய் பீம் திரைப்படம் மெல்பர்னில் நடைபெற உள்ள இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது.

முக்கிய  அங்கீகாரம்:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், உருவாகி கடந்தாண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. பழங்குடியின மக்களின், இன்னல்களை பேசும் இந்த படம்  பிரபலங்கள் பலரின் பாராட்டைப்  பெற்றது.

தற்போது இந்த படம், மெல்பர்னில் நடைபெற உள்ள இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தோடு சேர்த்து, பராசக்தி மற்றும் பெரியநாயகி, ரோடு டு குதிரையர் உள்ளிட்ட படங்களும், நடிகை டாப்சியின் Dobara  படமும் திரையிடப்பட உள்ளது.

ஏற்கனவே சூர்யாவின், சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.  அந்த வகையில் தற்போது, ஜெய் பீம் திரைப்படத்திற்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது  அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here