நடிகர் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை மையப்படுத்தி சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுமட்டுமின்றி இப்படத்தின் இந்தி உரிமையை கிட்டத்தட்ட 100 கோடிக்கு பிரபல நிறுவனம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 60% முடிவடைந்த நிலையில் வருகிற மார்ச் மாதம் முழுவதும் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்த சூர்யா நடிக்க இருக்கும் படத்தை குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த சுதா கொங்கரா உடன் மீண்டும் இணை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் சூட்டிங் கோடை காலத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அப்டேட் சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.