நடிகர் அஜித் குமார் தந்தை சமீபத்தில் இறந்த நிலையில் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தையான பி.சுப்ரமணியம் உடல் நல குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அஜித்தின் தந்தை உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவரின் இறப்பை தாங்க முடியாமல் கண் கலங்கி நின்ற அஜித்தை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக பலரும் ட்வீட் செய்தனர். அதைவிட தளபதி விஜய், ஏ.எல் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறினர்.
அமீருடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய பாவனி..,இது breakup பா.., அவரே வெளியிட்ட பதிவு!!
இந்த நிலையில் இரு பிரபலங்கள் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இன்று சென்னை ஈசிஆர் பகுதியில் இருக்கும் நடிகர் அஜித் வீட்டிற்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி நேரில் சென்று தன்னுடைய ஆறுதல்களை தெரிவித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram