நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சுஹாசினி, இந்தி பேசுறவங்க நல்லவங்க, அவங்க கூட பேச எல்லாம் இந்தி கத்துக்கோங்க என பேசிய விவகாரம் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலாய்க்கும் நெட்டிசன்கள்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுகாசினி. இவர் நேற்றைய தினம் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இவர், எங்களைப் போன்ற நடிகர்கள் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும், அனைத்து மொழிகளை மதிக்க வேண்டும் என்று பேசினார். கன்னட படங்கள் நம்மால் யோசிக்க முடியாத அளவுக்கு முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுபோக இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும், அவர்களுடன் உரையாட எல்லோரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார். இதைக் கேள்விப்பட்ட, நெட்டிசன்கள் அப்போது தமிழ் பேசுற நாங்கள் எல்லாம் யார்? உங்களுடன் உரையாட வேண்டும் என்றால் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ளட்டும், இந்தி தேசிய மொழி என்ற பிம்பத்தை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை என கூறி சுகாஷினிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்