தமிழ் திரையுலகில் பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்த ஸ்ரீகாந்த் தற்போது தனது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஸ்ரீ காந்த்
தமிழில் வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீ காந்த. நடிக்க வந்த ஆரம்பத்திலேயே அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தார். அவர் நடிக்க வரும்போது 20 வயது தான் ஆனதாம்.
அப்பொழுதே தனது தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கொள்ளை கொண்டார். பின் மக்கள் மத்தியில் அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் உருவானது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
1 வருடத்திலேயே 3 படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்,. இந்நிலையில் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார், வைரலாகி வருகிறது.