நடிகர் சூரி கடந்து வந்த பாதையை குறித்து அவர் தாயார் பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் சூரி:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் நடிகர் சூரி கடந்து வந்த பாதையை குறித்து அவர் தாயார் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பேசியதாவது, என்னுடைய மகன் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வாய்ப்புக்காக சோறு தண்ணிலா பார்க்காமல் அவ்வளவு கஷ்ட பட்டுள்ளார். இப்போ ஹீரோவாக நடித்துள்ளார். அதற்கு டைரக்டர் வெற்றிமாறன் தான் காரணம். எந்த கஷ்டம் வந்தாலும் என்கிட்ட சூரி சொல்லமாட்டார்.
அந்த வகையில் விடுதலை படத்தின் ஷூட்டிங் போது அவருக்கு கையில் அடிபட்டு தையல் போடப்பட்டது. ஆனால் அதை எனக்கு தெரியாமல் மறைத்துவிட்டார். ஏனென்றால் அந்த விஷயம் எனக்கு தெரிஞ்ச என்னால் தாங்க முடியாது என்பதற்காக என்னிடம் இருந்து மறைத்து விட்டார்.
இப்போது நான் எங்கு சென்றாலும் சூரி அம்மா என்று அழைக்கிறார்கள். அதில் எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், நாங்கள் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்த்தால் இந்த சந்தோஷம் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. அந்த அளவிற்கு கஷ்டம் பட்டுள்ளார் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.