தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் எஸ் ஜே சூர்யா, தன் வாழ்வில் 5ஆண்டுகளுக்கு முன் நடந்தது நினைத்து குமுறியதாக ஓபன் டாக் கொடுத்துள்ளார்.
கதறியே எஸ் ஜே சூர்யா :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் எஸ் ஜே சூர்யா. சமீப காலமாக மார்க்கெட் இல்லாமல் இருந்து இவருக்கு, சிம்புவுடன் நடித்த மாநாடு படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவர் தன் வாழ்வில் 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த, சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது 2018 ஆம் ஆண்டு, அமிதாப்பச்சனுடன் இணைந்து “தேரா யார் ஹூன் மைன்” என்ற இந்தி படத்தில் நடித்ததாகவும், ஆனால் அதன் ஷூட்டிங் 10 நாட்கள் மட்டுமே நடந்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த படம் கிடப்பில் போடப்பட்டதை அறிந்து, தான் கதறி அழுததாகவும், படத்தை மீண்டும் தொடங்க பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலன் அளிக்காமல் போனதாக குறிப்பிட்டார். அப்போது நான், மீண்டும் இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தற்போது தான் நிறைவேறி இருக்கிறது. தன்னுடைய வதந்தி என்ற வெப் சீரிஸ் மூலம், இப்போது நான் இந்தியில் அறிமுகமாகி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.