நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து சமீபத்தில் நடந்த உழவர் விருதுகள் 2023 விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சிவகுமார்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80, 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சிவகுமார். இவர் ஹீரோவாக மட்டுமின்றி பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா, கார்த்திக் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார். இதில் சூர்யா மற்றும் கார்த்திக் தற்போது முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் ஒவ்வொரு வருடமும் கார்த்திக் உழவன் பவுண்டேசன் சார்பில் உழவர் விருதுகள் வழங்கி வருகிறார்கள். அதே போல் இந்த வருடமும் விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து மேடையில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் 10 மாதம் குழந்தையாக இருக்கும் பொழுது என்னுடைய அப்பா இறந்து விட்டார், அதன் பிறகு என்னுடைய அம்மா தான் என்னை வளர்த்தார். இதற்கு மாறாக அப்பா உயிரோடு இருந்து அம்மா இறந்து இருந்தாங்க என்றால் நான் அனாதையாக இருந்திருப்பேன். எனக்கு சூர்யா கார்த்தியும் பிறந்து இருக்க மாட்டாங்க. எனவே அம்மா தான் கடவுள். மேலும் படைப்பு கடவுள் பெண்கள் தான் என்று உருக்கமாக கூறினார். இதை சொல்லும் போது அங்கிருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.