நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தனது கணவர் மற்றும் குழந்தைகளின் பெயரை கையில் மெஹந்தி போட்டு கொண்டதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
வைரல் போட்டோ:
தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டான் திரைப்படம், மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. தற்போது இவர், பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இவர் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள அவரது 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும், ஆராத்யா மற்றும் குகன் தாஸ் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது, சிவாவின் மனைவி ஆர்த்தி தனது கணவர் மற்றும் குழந்தைகளின் பெயரை கையில் மெஹந்தியாக போட்டு அதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மொத்த குடும்பத்தையும் உள்ளங்கையில் தாங்குகிறீர்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்