2 படத்துக்கு மேல நடிச்சாச்சு, இனிமேல் வேணாம்.., பிரபல நடிகை மேல் கண்ணு வைத்த சிவகார்த்திகேயன்!!

0
2 படத்துக்கு மேல நடிச்சாச்ச, இனிமேல் வேணாம்.., பிரபல நடிகை மேல் கண்ணு வைத்த சிவகார்த்திகேயன்!!
2 படத்துக்கு மேல நடிச்சாச்ச, இனிமேல் வேணாம்.., பிரபல நடிகை மேல் கண்ணு வைத்த சிவகார்த்திகேயன்!!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தை குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இப்பொழுது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முறை சிவாவுடன் நடித்து 100 கோடி அள்ளிய டாக்டர், டான் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பிரியங்கா மோகனை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் பிரபலத்தை பற்றி இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களே கொண்டாட ரெடியாகுங்க.., மீண்டும் இணையும் லவ் டுடே காம்போ.., வெளியான அப்டேட்!!

அதாவது கடந்த ஆண்டு துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் princess ஆக நடித்த நடிகை மிருணாள் தாகூர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here