நடிகர் சிவகார்த்திகேயன், சர்ச்சைக்கு பெயர் போன தயாரிப்பாளர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான அப்டேட் :
தமிழ் சினிமாவில், குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படத்தில் நடித்து தன் மொத்த இமேஜையும் சரித்துக் கொண்டார். தற்போது, இவர் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்தப் படத்திற்குப் பின், சர்ச்சைக்கு பேர் போன தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கும் படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தில் ராஜு சமீப காலங்களாக, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என கூறி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார்.
ஏற்கனவே பிரின்ஸ் படத்தில் ரிஸ்க் எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், தில் ராஜு வால் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தெரிந்தே அவர் படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்து சிவகார்த்திகேயன் நிலை என்ன ஆகுமோ? என அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.