மாநாடு இரண்டாம் பாகத்தின் கதை ரெடி – இப்ப எல்லாம் பார்ட் 2 தான் ட்ரெண்ட் போல!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாநாடு 2 அப்டேட்:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவாகி ரிலீஸான படம் மாநாடு. இந்த படம் வெளியான மூன்று நாளில் 22 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்துல்மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு, இரத்த தானம் செய்வதால்,அவரின் டைம் லூப் மற்றொரு நபருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த இரண்டாம் பாகம் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்த படத்தின் எடிட்டர் பிரவீன், இந்த படத்தின் முடிவில் வரும் டீசரை மிஸ் பண்ணிடாதீங்க என்று சொல்லி மாநாடு 2 என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு டிரெண்ட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here