ஜெயிச்சுட்டா இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா – நடிகர் சிம்பு மீது விஜய்யின் தந்தை பாய்ச்சல்!!

0

அண்மையில் ரிலீசாகி பெருவெற்றி பெற்ற மாநாடு படத்தின் வெற்றி விழாவில், நடிகர் சிம்பு கலந்து கொள்ளாததால், இப்படி நடந்து கொள்வது உகந்த செயல் அல்ல என இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய்யின் தந்தை பேச்சு:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் மாநாடு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை அடுத்து, நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாநாடு படத்தின், வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த விழாவில், நடிகர் சிம்பு கலந்து கொள்ளாதது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுகுறித்து விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சிம்பு வெற்றி விழாவிற்கு வந்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்தவுடன் இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here