நடிகர் சிம்பு ஜோதிகாவை ஒருதலையாக காதலித்த போது சூர்யா செஞ்ச சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிம்பு – ஜோதிகா
தமிழ் சினிமாவில் பல காதல்களை தாண்டி வந்து தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வரும் நடிகர் தான் சிலம்பரசன் என்கிற சிம்பு. இவர் நயன்தாராவிலிருந்து ஹன்சிகா வரை காதலித்து வந்திருந்தாலும், திருமணம் என்ற சம்பவம் மட்டும் இன்று வரை நடந்த பாடு இல்லை. இப்படி இருக்கும் சிம்பு, நடிகர் சூர்யாவின் மனைவியும், முன்னணி கதாநாயகியுமான ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் ஜோதிகாவோ நடிகர் சூர்யாவை காதலித்து வந்தாராம். அப்போது இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஜோதிகாவை பற்றியே புகழாரம் பாடி வந்தார். அந்த சமயத்தில் தான் சிம்பு தெளிவாக காயை நகர்த்தியுள்ளார். அதாவது நடிகர் சிம்பு இயக்கிய மன்மதன் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.
ரஜினியின் அரசியலுக்கு எண்ட் கார்டு போட்டதே நான் தான்., Ex குடியரசுத் தலைவர் பரபரப்பு பேச்சு!!
படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல் முடியும் நாள் வரை ஜோதிகாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சேர்ந்து சென்றுள்ளார். சொல்லப்போனால் ஷூட்டிங் நடந்த அனைத்து நாட்களிலும் சூர்யா அங்கேயே இருந்து ஜோதிகாவுடன் சிம்புவை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாராம். அதன் பிறகு தான் வல்லவன் படத்தில் நயன்தாராவை காதலித்துள்ளார். முதன் முதலில் நடிகர் சிம்பு காதலித்த பெண் ஜோதிகா என்பது சில பேருக்கு தெரியாத ஒன்று தான்.