விவேக்கிற்காக சிம்பு இறங்கி செஞ்ச காரியத்த பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் சிம்பு ஒரு காரியத்தை செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சிம்பு

தமிழ் திரையுலகில் இன்று வரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான், நடிகர் சிம்பு. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிம்பு பின்பு, காதல் கதைகளாக தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அஜித்தால் அவரது ரசிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – போலீசில் வழக்கு பதிவு!!

அதே போல் இவரது நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். இடையில் இவர் சில சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இப்படியாக இருக்க, தற்போது மீண்டும் தனது உடல் எடையினை குறைத்து விட்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரது திரைப்படமான “ஈஸ்வரன்” திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இப்படியாக இருக்க, இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சிம்பு விவேக்கின் மரம் நடும் கனவினை நிறைவேற்ற சிம்பு பல மரங்களை நட்டு வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here