“எனக்கு சிம்பு தான் வேணும்” – நடிகரின் வீட்டின் முன் தர்ணாவில் இறங்கிய சீரியல் நடிகை!!

0
"எனக்கு சிம்பு தான் வேணும்" - நடிகரின் வீட்டின் முன் தர்ணாவில் இறங்கிய சீரியல் நடிகை!!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் சிம்பு பற்றி பதிவிட்டுள்ள கருத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பரபரப்பு கருத்து :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீ நிதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வலிமை திரைப்படம் குறித்து தவறான, கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவரை அஜித் ரசிகர்கள், பயங்கரமாக கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிம்பு குறித்து முக்கிய ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும், நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம் என தெரிவித்துள்ளார்.

எனக்காகவே இத்தனை நாள் நடிகர் சிம்பு சிங்கிளாக இருக்கிறார் என்றும், எங்களுக்குள்ளான காதல் இவ்ளோ லேட்டாகி இப்பதான் எனக்கே புரிந்தது, அதனால் எல்லோரும் சேர்ந்து தயவுசெய்து எங்களை சேர்த்து வையுங்கள் எனக் கூறி அவரது வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். சிம்புவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்றும், எனக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here