நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் சிம்பு 48வது படத்தின் அப்டேட் குறித்து சமீபத்தில் நடந்த தனியார் சேனல் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் சிலம்பரசன். தற்போது இவர் நடித்த பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. இப்படத்தை தொடர்ந்து தனது 48 வது படமான “கொரோனா குமார்” படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சிம்பு 48வது படத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் எந்த படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கவில்லை. தற்போது என்னிடம் அதிகமான ஸ்கிரிப்ட்கள் இருக்கின்றன, அவற்றை எல்லாம் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி அதில் இயக்குனர்களுடன் சில சுவாரஸ்யமான படங்களும் இருக்கின்றன.
தமிழகத்தில் இந்த ரேஷன் கார்டு ரத்தா? அரசின் இழுபறியால் குழப்பத்தில் பொதுமக்கள்!!
சொல்லப்போனால் இப்பொழுது எனக்கு ரொம்ப பசியாக இருக்கிறது. உண்மையாகவே என் பசியை போக்கும் அளவிற்கு உள்ள ஒரு ஸ்கிரிப்டை நான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக காலம் நேரம் எடுத்துக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார். தற்போது சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சிம்பு 48 படத்தின் அப்டேட்க்காக அவருடைய ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.
View this post on Instagram