20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்தார்த்…..,சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சி….,

0
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்தார்த்.....,சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சி....,
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்தார்த்.....,சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சி....,

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த் அவரை 2007 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள ‘டக்கர்’ திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது.

விரைவில் சந்திப்போம்….,ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு…..,

இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நடிகர் சித்தார்த் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘நான் முதன் முதலாக ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு அடுத்தபடியாக நான் நடித்துள்ள 6 படங்கள் திரைக்கு வருகிறது. அதில் இந்தியன் 2 படமும் உள்ளது. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் சங்கர் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here