நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறாரா? என்ற கேள்விக்கு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
ஆத்தி.., ரெண்டுக்கும் நடுவுல என்ன ஒரு கேப் திவ்யா.., பார்க்கும்போதே போதை ஏறுதே.., சிதறிய இளசுகள்!!
இயக்குனர் பேட்டி:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷாலினி. இவர் நடிகர் அஜித்தின் மனைவி என்பது அனைவருக்கும் தெரியும். இவர் விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு, சினிமாவில் நடிப்பதை அறவே தவிர்த்து வந்தார். ஆனால், நடிகர் அஜித் படங்கள் வெளியானால், திரையரங்கத்தில் சென்று பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், மன்மத லீலை படத்தின் புரமோஷனுக்காக இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார்.
அந்த பேட்டியில், பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித் மற்றும் ஷாலினி புகைப்படத்தை காட்டி, ஷாலினி மீண்டும் நடிக்க வந்தால், அவர்களுடன் பணியாற்றுவீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர், நடிகை ஷாலினி தற்போது குழந்தைகளுடன் பிசியாக இருக்கிறார் என்றும், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும், என் குடும்பத்தில் வந்து ஏன் கை வைக்குறீங்க என அஜித் என்னை சும்மா விட மாட்டார் என காமெடியாகவும் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்