பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யா கான் புதிதாக சரக்கு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான்:
பாலிவுட் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடித்த பதான் திரைப்படம் பாலிவுட்டில் இதுவரை இல்லாத வசூலை வாரி குவித்தது. அவருக்கு ஆர்யா கான் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்து பார்ட்டி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தனது மகனை ஜாமீனில் விடுவிக்க ஷாருக்கான் பெரும் போராட்டத்தையே நடத்தினார். அதன் பின்னர், தன்னுடைய மகன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டினார் ஷாருக்கான். அதுமட்டுமின்றி மகனை கைது செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆர்யா கான் சரக்கு கம்பெனியை ஆரம்பித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு , ரிசல்ட் எப்பொழுது தெரியுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!
அதாவது ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் புதிதாக D’YAVOL எனும் சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தி டிவி நடிகர்கள், நடிகைகளை வரவழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது நடிகைகளுடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் போதைப்பொருள் வழக்கில் மாட்டியும் திருந்தவில்லையா என்று அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து விளாசி வருகின்றனர்.