ஷாருக்கான் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் – வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!!!

0

ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் வீடு இருக்கும் நகருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், மேலும் அது வதந்தி என்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

நடிகர் ஷாருக்கான்:

பிரபல இந்தி திரைப்பட நடிகராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் ஷாருக்கான். திவானா திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் மும்பை நகரில் உள்ள ஜபல்பூர் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள இவர்  ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களுடன் சேர்த்து வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் மும்பை காவல்துறையின் தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து தான் ராணுவத்தைச் சேர்ந்தவர் என்றும், மும்பையில்  வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும், சிஎஸ்எம்டி, குர்லா ரயில் நிலையம், ஷாரூக்கானின் பங்களா மற்றும் அருகில் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து மும்பை காவல்துறை மோப்ப நாய்களுடன் சென்று சோதனை செய்தனர். ஆனால் அந்த நபர் தொலைபேசியில் கூறியவாறு சந்தேகத்திற்குரிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு இது ஒரு புரளி என்றும் தெரிய வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here