தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சதீஷ். அந்த வகையில் இவர் நடித்த கத்தி, ரெமோ, மான் கராத்தே போன்ற பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது. இப்படி காமெடியில் பிசியாக இருந்த சதீஷ், திடீரென சந்தானம் போல் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றாலும், வசூலில் படுதோல்வி அடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படம் திரையில் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் காணாமல் போனது. அதன் பின்னர் திரும்பவும் காமெடி பக்கம் ஒதுங்கினார். அதன்படி சமீபத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் நடித்தார். வெறும் 10 நிமிடங்கள் வந்தாலும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தார்.
இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமானநிலையத்தில் 5 திரையரங்கு கொண்ட PVR மல்டிபிளக்ஸ் தியேட்டர் இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் சதீஷ், ஆனந்தராஜ் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் சதீஸ் பேசியதாவது, நான் சேலத்தில் இருந்து நடிக்க சென்னை வந்த போது, சத்யம் தியேட்டரில் 10 ரூபாய் டிக்கெட் எடுக்க காத்துக் கொண்டிருப்பேன்.
அப்படி நான் காத்திருந்து 10 ரூபாய் டிக்கெட் எடுத்த பார்த்த திரைப்படம் கில்லி, தூள் மற்றும் அந்நியன் படங்கள் அடங்கும். அப்போதெல்லாம் முதல் நாள் ஷோ பார்க்க முடியாது. நான்கு நாட்கள் கழித்து தான் பார்க்க முடியும். ஆனால் 10 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் ரசிக்கும் படி இருக்கும் என்று கூறினார்.