அனீஸ் இயக்கத்தில் சசிக்குமார் வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி நடிக்கும் படம் “பகவானுக்கு அருள்வாய்” படப்பிடிப்பு ஆரம்பம் ஆகியுள்ளது. சின்னத்திரையில் கலக்கிய வாணி போஜன் இப்போது வெள்ளித்திரையில் கலக்க உள்ளார்.
“பகவானுக்கு அருள்வாய்”:
வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான “திருமணம் எனும் நிக்காஹ்” படத்தை இயக்கிய அனிஸ் எனும் இயக்குனரும் தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்தப்படத்தில் கதா நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்க இருக்கின்றனர்.
விமான நிலையத்தில் வைரத்தோடை தொலைத்த பிரபல நடிகை – உதவி கேட்டு ட்வீட்!!
வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி முதல் முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். 4 Monkeys நிறுவனம் சார்பில் சத்யம் கிஷோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். ‘விஸ்வரூபம்- 2’ ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து செம அப்டேட்ஸ் கிடைத்துள்ளது. “எம்.ஜி.ஆர் மகன்”, “கொம்பு வச்ச சிங்கம்டா”, “ராஜவம்சம்” என இவரது படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.