என் குடும்பத்தை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.., சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சரத்குமார்!!

0
என் குடும்பத்தை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.., சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சரத்குமார்!!
என் குடும்பத்தை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.., சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சரத்குமார்!!

நடிகர் சரத்குமார் 2 யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமார்:

தமிழ் சினிமாவில் நாட்டாமை, சூர்யவம்சம், பாட்டாளி, ஐயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சரத்குமார். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 24 தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1 திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் பொன்னியின் செல்வன் பார்ட் 2வில் நல்ல வசூலை அள்ளும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிருச்சு., சுத்தி இருக்க ஆள் Full ஆ இப்படித்தான் இருக்காங்க! சுருதிஹாசன் திடீர் பதிவு!!

இந்த நிலையில் 2 யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் சரத்குமாரின் குடும்பத்தினரை குறித்து அவதூறு பரப்பியதாகவும், நடிகை ராதிகாவின் உடல்நிலை குறித்து சிலர் பொய்யான வதந்திகளை 2 யூடியூப் சேனல்கள் கூறி வருவதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here