தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சரத்பாபு. அந்த வகையில் இவர் நடிகர் கமல், ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்து சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இவர் செகண்ட் ஹீரோவாக நடித்த அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. இவர் கடைசியாக பாபி சிம்ஹா, ஆர்யா சேர்ந்து நடித்த வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கடந்த மாதம் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் இந்த சலுகையும் இருக்கு?? முக்கிய தகவல் வெளியீடு!!
சிகிச்சை தொடர்ந்து வந்தாலும் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறார் என்றும், வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இவர் உடல் தேறி வருகிறது என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். தற்போது இந்த சம்பவம் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.