தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணிக்கு பிறகு மற்றவர்களை கலாய்த்து மக்களை சிரிக்க வைப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் தற்போது காமெடியில் இருந்து விலகி கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. இருப்பினும் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம், குளு குளு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி பல தோல்வி படங்களை கொடுத்து வரும் சந்தானம் தொடர்ந்து முயற்சி செய்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சந்தானம் மீண்டும் காமெடியில் களமிறங்க இருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் சுந்தர் சி படைப்பில் நடிகர் சந்தானம் நடித்த அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி.., கோபத்தில் பிறப்புறுப்பை அறுத்த கணவன்.., பீகாரில் நடந்த சம்பவம்!!
இப்படத்தில் இவர் நடித்த பால்சாமி கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அரண்மனை பாகம் 4 படத்தை சுந்தர் சி இயக்க இருக்கிறார். இதில் லீடு ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், காமெடியனாக நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் அந்த பால் சாமி கதாபாத்திரம் திரைக்கு வருமா?? என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.