ஓ சொல்றியா பாடலுக்கு பிறகு பாலிவுட் பட வாய்ப்புகளை அள்ளி வரும் நடிகை சமந்தா – போட்ட குத்தாட்டம் வேலை செய்யுது போலையே!!

0
அட கொடுமையே., என்ன சமந்தா இதெல்லாம்., 2 பீஸ் உடையில் அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்!
அட கொடுமையே., என்ன சமந்தா இதெல்லாம்., 2 பீஸ் உடையில் அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்!

ஓ சொல்றியா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தாவிற்கு தற்போது பாலிவுட் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் சமந்தா ஏக உற்சாகத்தில் உள்ளார்.

நடிகை சமந்தா:

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இந்த படத்தின் தெலுங்கு படைப்பில் நாயகியாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பால் மக்கள் மனதை வென்றார்.

அதன் பிறகு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வரும் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருந்தார்.

மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவரும் சமந்தாவை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்த பாடலால் நடிகை சமந்தாவின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது என்றே கூறலாம். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இவர் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு உள்ளதாகவும் தற்போது வரை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அதனால் நடிகை சமந்தா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here