நடிகர் ரவி மரியா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் தொடங்கி பண மோசடி செய்து வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவி மரியா
நடிகர் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த குஷி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் உதவி இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் ரவி மரியா. குஷி வெளியாகி வெற்றி கண்ட அடுத்த ஆண்டிலேயே ஆசை ஆசையாய் என்ற படத்தை நடிகர் ஜீவாவை வைத்து எடுத்தார். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் மீண்டும் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக சென்று, வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கடுத்து இவர் எடுத்த மிளகா திரைப்படம் மக்களை அதிகம் கவர்ந்தது. தற்போது இயக்கத்திற்கு ரெஸ்ட் கொடுத்து முழுவதுமாக நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரவி மரியா காவல்துறையிடம் ஒரு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது நடிகர் ரவி மரியா பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான அக்கவுண்ட் ஒன்று உலா வருவதாகவும், அந்த Fake ஐடியை பயன்படுத்தி பண மோசடி செய்து வருவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் உண்மையான கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அவரே வெளியிட்ட வீடியோ!!
மேலும் அந்த Idக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று மக்களிடம் கோரிக்கை கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் எதிர்நீச்சல் மாரிமுத்து பெயரில் போலி அக்கவுண்டில் சர்ச்சையை கிளப்பியது.
View this post on Instagram