பெங்களூருக்கு தனது பிறந்தநாளை கொண்டாட சென்றிருந்த ரஜினிகாந்த் திடீரென்று தமிழகம் திரும்பியுள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிகின்றன.
ரஜினி மக்கள் மன்றம்
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி 13ம் தேதி கட்சி தொடங்கவிருப்பதாக தெரிவித்தார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் என்பவரையும் நியமனம் செய்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கிடையில் வருகிற 12ம் தேதி தனது பிறந்தநாள் வருவதால் தொண்டர்களின் கூட்டம் அலைமோதும், அதை தவிர்க்க பெங்களூர் செல்வதாக தெரிவித்தார். அங்கு அவரது சகோதரர் சத்திய நாராயணனிடம் ஆசி பெற்றார். பின்னர், பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அப்படியே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென தமிழகம் திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.
கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கும் தனம்!!
தமிழகம் திரும்பியதும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனிடம் கட்சி எங்கு ஆரம்பிப்பது? மாநாட்டை எப்போது தொடங்குவது? குறித்து பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கட்சி போஸ்டரில் அர்ஜுன் மூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் ஆகியோரின் புகைப்படம் இடம்பெறக்கூடாது என நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.