ரஜினிகாந்திற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை – ரசிகர்கள் ஷாக்!!

0

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் ரஜினிகாந்திற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த சூட்டிங்:

சிறுத்தை சிவா இயக்கி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கி விட்டது. அதன்பின் கொரோனாவின் தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து வருவதால் கடந்த மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, மீனா, குஷ்பு போன்றோர் கலந்து கொண்டனர்.

தற்போது படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் உட்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. மேலும் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

‘சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால ஏத்துக்க முடியாது’ கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

அதுமட்டுமல்லாமல் அவர் விரைவில் சென்னை திரும்பவுள்ளார். மேலும் அவருக்கு இன்று இரவு அல்லது நாளை காலை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here