நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!

0
Rajnikanth
Rajnikanth

அண்ணாத்த பட ஷூட்டிங்காக ஹைதராபாத்துக்கு ரஜினிகாந்த் சென்ற நிலையில் படப்பிடிப்புகளில் இருந்த 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரஜினியை தனிமைப்படுத்தினர். இந்நிலையில் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாக மருத்துவ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் ஷூட்டிங் அனைத்து நிறுத்தப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளால் மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பித்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றார்.

rajnikanth

முன்னாடியே தனது காட்சிகள் அனைத்தையும் படம்பிடித்து விடுங்கள் என்று கூறியதால் அவரது காட்சிகள் மட்டும் முதலில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் ரஜினியை தனிமைபடுத்தினர். அவருக்கு டெஸ்ட் எடுத்தபோது அவருக்கு கொரோனா நெகடிவ் என்று வந்ததாக செய்திகள் வெளியானது.

வடிவேல் பாலாஜியை மீண்டும் கௌரவித்த விஜய் டிவி!!

இந்நிலையில் அவரின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாக மருத்துவக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஹைதெராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு கொரோனாவிற்கான எந்த அறிகுறியும் இல்லை, அது சீராகும் வரை அவர் மருத்துவரால் கண்காணிக்கப்படுவார் என்று கூறியுள்ளனர். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here