தென்னிந்திய திரையில் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்திருந்த இவர் அன்புடன் ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிந்தார். இதன் பிறகு ஹீரோயினாக நடிக்க தொடங்கிய இவர் ”என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் நடிகர் கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் எஜமான், முத்து, வீரா போன்ற பல படங்களில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இப்படி சினிமா துறையில் புகழின் உச்சியில் ஜொலித்து கொண்டிருந்த இவரின் 40 ஆண்டு சினிமா பயணத்தை சிறப்பிக்க தனியார் சேனல் விழா ஒன்றை ஏற்பட்டு செய்திருந்தது.
தமிழக தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது வழங்கப்படும்?? வெளியான முக்கிய தகவல்!!
இதில் பிரபல நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராஜ்கிரண், மீனா குறித்து கூறியது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. அதாவது ”என் ராசாவின் மனசிலே” மீனா நடித்த போது இவரிடம் மீனா பேசவே மாட்டாராம், மிகவும் பயப்படுவாராம். மேலும் அப்படத்தின் ஒரு பாடலுக்காக மீனா உடை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போது அங்கு கேரவன் இல்லை என்றாலும், காரின் மறைவில் நின்று உடை மாற்றி கொண்டார். இப்படி ஒரு dedication இன்றைய காலகட்ட நடிகைகளிடம் பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.