தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் மீது அவரது வளர்ப்பு மகள் பிரியா, பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் மீது புகார் அளிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
அதிரடி புகார் :
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம், அழுத்தமான இடத்தை பிடித்தவர் ராஜ்கிரண். இவரது, வளர்ப்பு மகள் பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த காதல் திருமணம் ராஜ்கிரணுக்கு பிடிக்காததால், பிரியா என் மகளே இல்லை என சாடினார். பணத்துக்காக தன் மகளை, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக முனீஸ் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், வளர்ப்பு மகள் பிரியா தன் தந்தையான ராஜ்கிரண் தங்களை டார்ச்சர் செய்வதாக, குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் அவர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அழகில் ஜொலிக்கும் சிவப்பு ரோஜா பூ.., இதுவரை யாரும் பார்த்திடாத நித்யா மேனன் புகைப்படம் உள்ளே!!
இதுகுறித்து பேசிய அவரது கணவர் முனீஸ் ராஜா, பிரியாவின் சொந்த அப்பா தற்போது எங்களுடன் தான் இருக்கிறார். பிரியா மற்றும் அவரது அம்மா அணிந்திருந்த நகைகளை ராஜ்கிரண் இப்போது கொடுக்கச் சொல்கிறார். மகள் வேண்டாம் என்னால் அவரது நகைகள் மட்டும் வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.