நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. அதுபோக இப்படத்தில் ஐந்து மொழி நடிகர்கள் நடிக்கிறார்கள். அதனால் படத்தோட எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் intro வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படி பெரிய எதிர்பார்ப்பை தூண்டிய இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி என்பது எல்லோருக்கும் தெரியும். அவரின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வைத்து தான் நெல்சன் ஜெயிலர் படத்தை எடுத்துள்ளாராம்.
குறட்டையை வைத்து சாதித்த மணிகண்டன் – “குட் நைட்” படத்தின் வசூல் இத்தனை கோடியா?
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிவா ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.