நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருக்கு அறிவுரை கூறியதாகக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் படைப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நடிகராக படத்தில் சேர்த்து கொண்டே செல்கிறார் நெல்சன்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது இதுவரை எந்த படத்திலும் இல்லாத, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இருக்கும் நடிகர்களை ஜெயிலர் படத்தில் இணைத்திருக்கிறார் நெல்சன். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
தயவு செய்து திருமணத்திற்கு பிறகு Past பத்தி பேசாதீங்க.., கண் கலங்கிய ஹன்சிகா!!!
இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தை குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்தில் அவசரமாக போய் கொண்டிருந்த ரஜினிகாந்தை, ரசிகர் ஒருவர் I Love You தலைவா என்று கூவினார். அதற்கு ரஜினி ஒழுங்கா போய் வேலைய பாரு என்று கண்டித்து சென்றார். மேலும் பல ரசிகர்கள் ஒரே சூப்பர் ஸ்டார் அது நீங்கள் மட்டும் தான் என்று புகழாரம் பாடினர். அவர்களை கையெழுத்து கும்பிட்டு சென்று விட்டார்.