நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை தடுத்ததே நான் தான் என, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பரபரப்பு பேச்சு:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக, தனது உடல் நிலையை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிச்சயம் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!
தற்போது இது குறித்து விழா ஒன்றில் பேசிய முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுத்து நிறுத்தியது நான் தான் என தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அரசியல் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.