2வது குழந்தைக்கு தயாரான நடிகை பிரியங்கா சோப்ரா – இதையும் இந்த முறையிலேயே பெற திட்டம்!!

0
 2வது குழந்தைக்கு தயாரான நடிகை பிரியங்கா சோப்ரா - இதையும் இந்த முறையிலேயே பெற திட்டம்!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது முதல் குழந்தையை ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நிலையில், தற்போது 2வது குழந்தைக்கு தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது

இரண்டாவது குழந்தை:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அமெரிக்காவில் வசித்து வரும் இவர், திருமணமான நான்காண்டுகளுக்கு பின் வாடகை தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்து ஏழு மாதமே ஆன அந்த பெண் குழந்தைக்கு மல்டி மேரி என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது இந்த குழந்தை பிறந்து, இன்னும் ஒரு வருடம் கூட முடியாத நிலையில் பிரியங்கா சோப்ரா 2வது குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முதல் குழந்தையை போலவே இந்த குழந்தையையும், வாடகை தாய் முறையில் பெற்றுக் கொள்ள தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here