சினிமா துறையில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என அனைத்திலும் ரவுண்டு கட்டி வலம் வருபவர் தான் பிரேம்ஜி அமரன். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன். இவர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரேம்ஜிக்கு தனது அண்ணனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது, அதை அண்ணனிடம் கூறினார். ஆனால் வெங்கட் பிரபு கதாநாயகனாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என்று பிரபு , அந்த எண்ணத்தைக் கைவிட்டார் பிரேம்ஜி.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வெங்கட் பிரபு ஹீரோவாக நடிப்பதை விட தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் குறிக்கோளோட இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கங்கை அமரன் பிரேம்ஜிக்கு விரைவில் கல்யாணம் என்று கூறியதுக்கு, இல்லை நான் திருமணம் பண்ணிக்க மாட்டேன் மொரட்டு சிங்கிள் பையனாக தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். இந்த நிலையில் பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட்., உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியீடு! மாவட்ட நிர்வாகம் அதிரடி!!
அதாவது, பாடகி வினைத்தாவை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாக உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாடகி வினைதா பிரேம்ஜியை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘என் புருஷன் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது பிரேம்ஜியும் வினைதாவும் ரகசிய கல்யாணம் செய்தாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.