தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் மனதை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எக்கசக்க திரைப்படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதன் பிறகு தமிழ் திரையில் முக்கிய நாயகனாக ஜொலித்து வந்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் தற்போது இவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் பர்சனல் லைபில் ஹேப்பியாக இருந்து வருகின்றனர். மேலும் தற்போது இவர்கள் இருவரும் தங்களின் கெரியரில் ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் தங்களுடைய 11 வது திருமண நாளை அடைந்துள்ளனர்.
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணையும் னுஷ் – ஐஸ்வர்யா.., முக்கிய தகவல் லீக்!!
இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்னும் சிறப்பிக்கும் வகையில் பிரசன்னா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களுடன் உருக்கமான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். அதாவது ”ஹே பொண்டாட்டி, உன்னுடைய அன்பால் என் வாழ்வில் நான் சந்தித்த இருள் நீங்கி நீக்கப்பட்டுள்ளது. மேலும் உன்னுடைய புன்னகையால் என்னுடைய உலகை மிகவும் அழகாக்கி கொடுத்துள்ளாய் என கூறி தனது மனதில் இருக்கும் காதலை அழகிய வார்த்தைகளால் வெளிப்படுத்தி சினேகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.