நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் வெளியான நரேந்திர மோடி மற்றும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து விமர்சித்து பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ்
தமிழ் சினிமாவால் ரசிகர்களால் செல்லம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அவர் நடிப்பது மற்றுமின்றி மத்திய அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மீண்டும் மத்திய அரசை விமர்சித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பதான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எந்த முட்டாள்கள் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தை வெளியிட கூடாது என்று நினைத்தார்களோ, அவர்களால் நரேந்திர மோடி படத்தை 30 கோடிக்கு கூட ஓட வைக்க முடியவில்லை என்றும் அவர்களால் குலைக்க மட்டும் தான் முடியும், வேறு ஒன்றும் செய்ய முடியாது. அதை நினைத்து நாம் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.
ச்சே.., என்னது இது.., சேலையில கூட தொப்பை தெரியுதே.., இப்படி ஆகிடீங்களே அமலா பால்!!!
மேலும் காஷ்மீர் பைல்ஸ் ஒரு அர்த்தமற்ற திரைப்படம். இந்த திரைப்படம் எல்லாம் வெறும் 200 கோடிக்கு எடுத்து விடலாம். எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நடுவர் மன்றம் இந்த படத்தை காரி துப்பி வருகின்றனர். ஆனால் அவர்கள் வெட்கமே இல்லாமல் திரிகிறார்கள். மேலும் அந்த பட இயக்குனர் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். நான் சொல்கிறேன் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் கூட வாங்க முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.