நடிகரும் இயக்குனருமான பார்த்திபனை விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவலை நடிகை சீதா தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்:
தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சீதா. இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் நடித்த இவர், பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2001 ல் இருவரும் பிரிந்து சென்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், விவாகரத்து பெற்று சென்ற சீதா சில நாட்கள் தனியாக வாழ்ந்த நிலையில், கடந்த 2010ல் சதீஷ் என்பவரை 2ம் திருமணம் செய்தார். ஆனால் 6 வருடங்கள் கழித்து 2016 இல் அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது தனியே வாழ்ந்து வருகிறார்.
குக் வித் கோமாளி 2 டைட்டில் Win பண்ணி இருந்தா வருத்தப்பட்டு இருப்பேன்., பவித்ரா திடீர் விளக்கம்!!
இந்த நிலையில் பார்த்திபனை பிரிந்ததற்கான காரணம், குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, என் புருஷன் எனக்காக மட்டுமே என வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது எனக்கு நடக்கவில்லை. அதனால்தான் அவரை விவாகரத்து செய்தேன் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.