அண்மையில் நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்ட, நடிகை நிக்கி கல்ராணி கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடுவராக நிக்கி :
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தன்னுடன், மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆதி என்பவரை சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பில் திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து திரையுலகில் இருப்பாரா? என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது. தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக, கலர்ஸ் தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை நிக்கி நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்