விக்கியின் குலதெய்வ கோயிலில் நேர்த்திக்கடன் செய்த நயன் – சாமி தரிசனத்துக்கு பின் முக்கிய காரியம் செய்த நடிகை!!

0
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!

காதலர் விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற நயன், கூட்டத்தில் தன்னை பார்க்க வந்த மாற்றுத்திறனாளி பெண் ரசிகையிடம் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெகிழ்ச்சி செயல் :

கோலிவுட் சினிமாவில் காதல் ஜோடிகளான, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி இருவரும்  விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு இருவரும் தரிசனத்துக்காக சென்றிருந்தனர்.

அப்போது நடிகை நயன்தாரா, அந்தக் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். இதையடுத்து, சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த போது, அங்கு திரண்ட ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். அப்போது மாற்றுத்திறனாளி பெண், ரசிகையின் செல்போனை வாங்கி நயன்தாராவே போட்டோ எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து தப்பே இல்லை, என்று கூறி மனதார வாழ்த்தி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here