இந்திய திரையுலகில் நடிகர், தொழிலதிபர், அரசியல் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா என ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். இதை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் குறித்து வெளிப்படையாக தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் மௌனமாக இருந்து வருகிறார். மேலும் எதற்காக நெப்போலியன் விஜயை இப்படி பேசுகிறார் என்பதற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த ‘போக்கிரி’ திரைப்படத்தில் நடிகர் போலியன் நடித்திருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் அவர்கள் தனது கேரவனில் உடை மாற்றி கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் நெப்போலியன் தனது நண்பர்களுடன் அந்த கேரவனுக்குள் நுழைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் நெப்போலியனை கடுமையாக திட்டியுள்ளார். அந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு தான் விஜய்யுடன் நடிப்பதை நெப்போலியன் தவிர்க்க தொடங்கியுள்ளாராம். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் நான் விஜய்யுடன் நடிக்க தயார் என இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.