நடிகர் நாகசைதன்யா மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் நாகசைதன்யா:
தெலுங்கு சினிமாவில் முன்ணணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகசைதன்யா. தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் இருந்தே சமந்தா மீது அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்சம் காலம் கூட ஒன்றாக சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து சென்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று தற்போது வரை புரியாத புதிராக தான் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் அவர் எங்கு சென்றாலும் அந்த நடிகையுடன் சென்று வருகிறார் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் நாகசைதன்யா லண்டனில் இருக்கும் பிரபலமான ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு.., ஏப்ரல் 1 முதல் அமல்.., அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு!!!
இதை தொடர்ந்து அந்த ஹோட்டலில் சமையல் வேலை பார்க்கும் சமையல் கலைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த போட்டோவில் சோபிதா துலிபாலா அமர்ந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அதன் பின்னர் நாகசைதன்யா அலுவலகத்தில் இருந்து போட்டோவை நீக்கும் படி சொன்னதாக கூறப்படுகிறது.